ஆந்திராவில் ஒய் எஸ்ஆர் காங்கி ரஸ் தலைவர் ஜெகன் மோகன் முதல்வராக இருந்த பொழுது, ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவரான சந் திரபாபு சிறையில் அடைக் கப்பட்டார். தற்போது ஆந்திரா வில் ஆட்சி அதிகாரம் மாறி தெலுங்கு தேச தலைவர் சந்தி ரபாபு முதல்வராக பொறுப் பேற்றுள்ள நிலையில், சந்திர பாபு மக்கள் நலப் பணிகளை விட தன்னை சிறையில் அடைத்த ஜெகன் மோகனை பழிவாங் கவே தீவிரம் காட்டி வருகிறார். அதாவது ஜெகன் மோகன் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடு சம்பவங் களை தோண்டி எடுக்கும் வேலை யை முதன்மையான அரசு பணி யாக சந்திரபாபு அரசு மேற் கொண்டு வருகிறது.
வாரம் ஒரு ஊழல்
இதனால் ஜெகன் மோகன் ஆட்சியின் அவலங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு ஊழல் சம்பவங்க ளின் தொகுப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் ஜெகன்மோகனின் “முட்டை பப்ஸ் ஊழல்” என்ற பெயரில் புதிய ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் “முட்டை பப்ஸ் ஊழல்” என்ற பெயரில் செய்தி ஒன்று வைர லாகி வருகிறது. அதில், “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 5 ஆண்டு காலகட்டத்தில் (2019- 2024) ஜெகன் மோகனுக்கு 3.62 கோடி ரூபாய்க்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் பில் போட்டுள்ளது. அந்த வகை யில் ஆண்டுக்கு மட்டும் சரா சரியாக 72 லட்சம் ரூபாய் முட்டை பப்ஸ்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கி றது. ஒரு நாளைக்கு மட்டும் ஜெகன் மோகன் 993 முட்டை பப்ஸ் சாப்பிட்டு இருக்கிறார். 5 ஆண்டுகளில் மொத்தம் 18 லட்சம் முட்டை பப்ஸ் வாங்கப் பட்டு இருப்பதாக பில்லில் கூறப்பட்டிருக்கிறது. முட்டை பப்ஸ்களுக்கு மட்டுமே ஐந் தாண்டுகளில் மூன்றே முக் கால் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என் றால் மற்ற விவகாரங்களுக்கு ஜெகன்மோகன் அரசு பணத்தை எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தி யிருக்கிறார் என்பதை இதை வைத்தே கண்டுபிடிக்க முடி யும்” என அந்த செய்தி குறிப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திக்குப் பின்னர் “முட்டை பப்ஸ் ஜெகன் மோகன்” என்ற பெயரில் ஹேஷ்டேக் டாப் டிரண்டிங் கில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏமாற்றமடைந்த உணவுப் பிரியர்கள்
முதலில் “#முட்டை_பப்ஸ்” என்ற பெயரில் ஜெகன் மோகனின் ஊழல் தொடர்பான செய்திகள் ஹேஸ் டேக்காக சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அதன் பின்னரே “#முட்டை_பப்ஸ்_ஊழல்”, “#முட்டை_பப்ஸ்_ஜெகன்மோகன்” என அடுத்தடுத்து 2 ஹேஸ்டேக்குகள் வைரல் ஆகின. முதல் ஹேஸ்டேக்கான “#முட்டை_பப்ஸ்” வைரலாகிய பொழுது ஏதோ புதிதாக முட்டை பப்ஸ் வந்துள்ளதோ என உணவு பிரியர்கள் இணையத்திலும், ஹேஸ்டேக் ஆப்ஷனில் வலைவீசி தேடியுள்ளனர். தேடிய பின்னர் தான் அது முட்டை பப்ஸ் இல்லை, ஆந்திர மாநில முன்னாள் அரசின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த “#முட்டை_ பப்ஸ்_ஊழல்” என தெரியவந்துள்ளது. அரசியல் குற்றச் சாட்டால் உணவுப் பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.